உள்ளப் பிரிதல்

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்”

என்றென்றும் நான் அன்பு செய்யும் என் பிரியமான கீத்துமா,

என் பிறந்தநாள் வருகிறது என்ன செய்யலாம் என்று யோசித்தபோது தோன்றிய சில எண்ணங்களில் ஒன்று என் வாழ்வை பின்னோக்கி பார்த்து அதில் நடந்த அத்தனை நல்லவைகளுக்கு நன்றியும் அல்லவைகளுக்கு மன்னிப்பும் கேட்கலாம் அதுவும் நம் மனதிற்கு நெருக்கமான ஒருவரிடம் என்று தோன்றியது. கடந்த இரண்டாண்டுகளில் நம் வாழ்வில் நடந்த பேரின்பம் நாமும் நம் காதலும் அதனால் உனக்கு இந்த கடிதம் எழுதுவதே சரியாக இருக்கும்.

நாம் இருவரும் அறிமுகமாகி ஒரு வருடத்திற்கும் மேலாகியும் பிறகுதான் நெருங்கினோம், காலம் இயல்பாக நமக்குள் நெருக்கத்தை கொண்டுவந்தது. இந்த ஒரு வருடத்தில் நாம் இருக்கும் வாட்சப் குழுக்களில் குறிப்பாக பழைய விவாத மேடை குழுவில் நான் அனுப்பும் குறுஞ்செய்திகள் என் வழக்கமான குறும்போடுதான் வரும் அதற்கு உன்னிடம் இருந்து வரும் பதில் அழகாகவும் ரசிக்கும் படியும் இருக்கும். அப்படி நாம் குழுக்களில் பரிமாறிக்கொண்ட செய்திகள் நம் மனதில் ஒரு சுகந்தத்தை கொடுக்கும். என் வாழ்வில் மேடை பேச்சு என்ற ஒன்று நான் மிகவும் ரசித்து செய்தது, அது நமக்குள் இப்படி ஒரு பந்தத்தை உருவாக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த பேச்சு வடிவம் வழியாக தமிழ் நமக்கு, உன்னை எனக்கும் என்னை உனக்கும் தந்துள்ளது. தமிழுக்கும் உனக்கும் நன்றி சொல்ல வேண்டும். அந்த ஒரு வருடம் காலமும் தமிழும் நம்மை உரு போட்டு நம் காதலை கரு கொள்ளச்செய்துள்ளது.

நாம் சந்தித்து ஒரு வருடம் கழிந்த பிறகு வந்த அந்த அந்த பேச்சு மேடைத் தயாரிப்பு கூட்டத்திற்கு நீ முன்பே கலர் பேலட் எல்லாம் வைத்து அதற்கு ஏற்றாற்போல் உன் ஆடை நிறங்கள் எல்லாம் ட்ரியல் பார்த்து தயாரான பின்பும் அடுத்த நாள் கூட்டத்தில் உன் மைக் சரியாக வேலை செய்யாமல் போனதில் உண்மையில் எனக்கு வருத்தம். அன்று மாலை ஜூம் ல் ஒரு மணி நேரத்திற்கும் மேல பேசியபோது என் மனதில் எந்த விதமான எதிர் பார்ப்புமின்றி உன்னை பற்றி எனக்கு (prediction) சொல்லத் தூண்டியது, சொல்லத் தோன்றியது எது என்று தெரியவில்லை.ஆனால் எல்லாம் எங்கிருந்தோ கொட்டியது. அதிலும் உன் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை, உன் வாழ்வில் இருந்து இப்பொழுது இல்லாமல் போன உனக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர்களை பற்றியெல்லாம் சொல்ல நேர்ந்ததற்கு காரணம் உன்னோடும் உன் எண்ணங்களோடும் ஆற்றலோடும் அடர்த்தியான தொடர்பு இருந்ததால் தான். இப்படி உன்னை பற்றியெல்லாம் நான் சொன்ன பிறகு உன்னிடமிருந்து வந்த “ஐ அம் இம்ப்ரெஸ்டு சேரன்” என்ற சொற்பதத்தை நீ சொன்ன விதம் இருக்கே உலக பிரசித்தி பெற்ற ஓவியர்களின் ஒய்யாரமான ஓவியமாய் தெரிந்தாய். தலையை பக்கவாட்டில் சாய்த்துக்கொண்டு வெளிர் மஞ்சள் ஒளியில் மிருதுவான குரலில் வாஞ்சையோடு நீ சொன்னது என் காதுகளில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

நடுவில் உனக்கு ஒரு செய்தி இலக்கியத்தில் சிலப்பதிகாரத்தில் மாதவி தன் காதலன் கோவலனுக்கு எழுதிய கடிதம் தான் முதல் முதலில் தமிழில் எழுதப்பட்ட கடிதம் என்று அறிகிறேன். அவள் எழுதிய அந்த கடிதத்தைப் பெற்றுக்கொண்ட கோவலன் அந்த கடிதத்தை கொண்டு வந்தவரிடம் கொடுத்து அனுப்பி இந்த கடிதத்தை போய் என் தந்தையிடம் கொடு என்று சொல்லிவிடுவான். காரணம் பெரும் செல்வந்தரான கோவலனின் அப்பா தன் காதலி மாதவி தீயவள் என்று சொல்லிக் கொண்டிருப்பதால் அந்த கடிதத்தை அவரிடம் காண்பித்தால் மாதவி எவ்வளவு நல்லவள் என்று தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் மேலும் அவள் மேல் எந்த தவறுமில்லை எல்லா தவறும் என்மேல் தான் என்று தன் அப்பாவிற்கு புரியும் என்பதால் அவன் அப்படி சொன்னான் அதற்கு காரணம் அந்த கடிதம் அவ்வளவு அழகாக எழுதப்பட்டு அது சொல்லும் செய்தி .

அந்தக் கடிதத்துக்கும் நான் உனக்கு எழுதும் கடிதத்திற்கு என்ன தொடர்பு என்றால், அது போன்றதொரு கடிதமாக இது இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதில் கோவலன் நினைத்தது போல் எல்லா தவறும் தன்மேல் தான் என்று அவன் சொல்லுவான் ஆனால் இங்கு நம்மிடையே சரி தவறு என்று எதுவும் இல்லை. காதல் பொதுவா முடிவதே இல்லை எந்த ஒரு விதிகளுக்கும் உட்பட்டதல்ல நியூட்டனின் மூன்றாம் விதியை தவிற. இருந்தாலும் நான் உன்னிடம் காண்பித்தக் கோபத்திற்கும் பல நேரங்களில் உன்னை கத்தியத்திற்கும் மனம் என்னையே நொந்துகொண்டதால் இந்த கடிதம்.

நான் ஏற்கனவே சொன்னது போல் நம் வாழ்வில் நிகழ்ந்த பேரின்பம் நீயும் நம் காதலும் இந்த கடிதம் என் மனதில் உள்ள அத்தனை நினைவுகளையும் அத்தனை நிகழ்வுகளையும் அனிச்சையாக எழுதுகிறேன். அன்பு பரிவு பாசம், நேசம் காதல் சாபம் ஏக்கம் இவைகளை தாண்டி நமக்குள் இருந்த ரெஸ்பெக்ட், கம்யூனிகேஷன் பிரண்ட்ஷிப் இவைகள் தான் நம் காதலை உறுதிப்படுத்தியது அதுதான் நம் காதலை தனித்துவமாக்கியது.

இன்றைய ரிலேஷன்ஷிப் கோச்சஸ் கவுன்சிலர்ஸ் சொல்லுகின்ற அத்தனையும் நமக்குள் இருந்தது. நீ அனுப்பி இருந்த அந்த சேர் உள்ள ஜோடிகள் உட்கார்ந்த வீடியோவில் நாம் நம்மை அதில் பொருத்தி பார்த்த பொழுது அதிக இடைவெளி இல்லாமல் அமர்ந்திருப்போம் என்றே இருவரும் சொன்னோம் அதுதான் நம் காதலை அர்த்தப்படுத்தியது அடித்தளத்தை வலிமையாக்கியது அந்த காதலுக்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி கண்ணம்மா.

நம் ஜூம் காலுக்குப் பிறகு நாம் பேச ஆரம்பித்த சில நாட்களில் ஒருமுறை நான் சொல்லாமல் என் காலேஜ் ஓல்ட் பிரண்ட்ஸ் பார்க்க போயிருந்தேன் நீ எனக்காக போன் பண்ணி பார்த்துவிட்டு நான் கொஞ்சம் லேட்டாக வந்து உனக்கு போன் பண்ணினேன் அப்போ உன் பேச்சிலிருந்து பரிதவிப்பு, காத்திருந்த வெறுமை, அப்ப நீ என்னிடம் சொன்ன சொற்கள் எல்லாம் என்றும் மறக்க முடியாதவை. இவரைப் பற்றி தெரியாமல் இப்படி பழக ஆரம்பிச்சுட்டோமே என்று உனக்கு சந்தேகம் வந்துவிட்டதாக சொன்னாய். அந்த இடத்தில் நெட்வொர்க் கிடைக்காததால் வெளியே வந்து ஒரு தெரு தள்ளி கார் ஐ பார்க் பண்ணிவிட்டு உன்னை அழைத்தேன் அந்த இடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நாம் பேசினோம் அன்றைய தினம் தான் உன் பேச்சில் உன் காதலை முழுமையாக உணர்ந்தேன் அந்த காதல் உன் உள்ளத்தில் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்ற எண்ணம் தான் நானும் என் மனதில் எந்தவித சந்தேகமும் இன்றி என் மனதை முழுவதுமாக நம் காதலுக்கு ஒப்புக்கொடுக்க காரணம். இயல்பான அந்த பேச்சு அன்று உன் குரலில் இருந்து எதிர்பார்ப்பு, வாஞ்சை எல்லாம் என்னை கட்டிப்போட்டது அன்று ஒரு முடிவு எடுத்தேன் என் மனதில், இனிமேல் நீ அழைத்தால் உன்னை ஒருபோதும் காக்க வைக்க கூடாது என்று, இதை கூடிய மட்டும் காப்பாற்றுகிறேன் என்று நினைக்கின்றேன். மிக சொற்பமான தருணங்களில் தான் உன் அழைப்பை எடுக்க முடியாமல் போயிருக்கும்.

அன்று அந்த தருணத்தில் நாம் பேசிய பேச்சின் ஒரு சில விஷயங்களுள் ஒன்றுதான் நான் அந்த வருடம் என் பிறந்தநாளுக்கு பௌர்ணமி அன்று கடற்கரையோர அழகிய அந்த நகரில் தங்கலாம் என்று கேட்டேன் அது கஷ்டம் அப்படி இப்படி என்று சொல்லி தட்டி கழித்தாய். சரி அப்படியே நாம தங்கினாலும் இருவரும் வேறு வேறு அறையில் தான் தங்கணும் என்று சொல்லிவிட்டு நாம் பேசி சிரித்ததை இங்கு எழுத முடியாது. நீ போட்ட அந்த கண்டிஷன் உன் மனதிற்கு தெரியும் என்ன நடக்கும் என்று அது ஒரு சுகந்தமான மனநிலை இது குறித்து நாம் ஜாலியாக நிறைய பபேசினோம்.

அதன் பிறகு வீடு வந்து பப்புவை தூங்க வைத்துவிட்டு நாம் மீண்டும் பேசினோம் அந்த இரவு தான் நாம் நம் காதலை உறுதி செய்த இரவாக நாம் மாற்றினோம் அப்படி ஒரு நாளுக்கும் தருணத்திற்கும் நன்றி. இப்படிப்பட்ட அந்த நாளை இந்த வருடம் மறந்துவிட்டேன் அதற்கு ஒரு மிகப்பெரிய சாரி.

தொடரும் ……..

பின்னூட்டமொன்றை இடுக

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑