வருந்தி அழைத்தாலும் வராது
தானாக வரும் காதல் போல
——-
எத்தனை முறை பெய்தாலும்
அடுத்தமுறை எப்போது
ஏக்கத்தில் மனது
——–
மழை எழுதிப்பார்த்ததில்
நனைந்து போனது இதயம்
——
குடை பிடித்து தடுத்தாலும்
தடை தவிர்த்து பாதம் தொடும்
——-
மழை இசை
மழை இரைச்சல்
மழை இம்சை
மழை இயக்கம்
——–
மழைக்காக காத்திருந்த மனசு
வந்தவுடன் கேட்க்கும் மழை நின்னாச்சா
——-
வராத போது மழை பிடிக்கும் மனசுக்கு
வந்தவுடன் குடை பிடித்துவிடும்
——-
கறுப்பு கொடி காட்டினாலும்
கம் என்று பெய்துவிடும்
——–
கவிஞனுக்கு மழை கூடல்
சிறுவனுக்கு அது கடல்
——-
நின்ற பின்னும்
பெய்துகொண்டே ……இருக்கும்
மனதில்
——
உழவு நிலத்தில் விளைச்சலானது
பரிணாம வளர்ச்சியில் அரசியலானது
பின்னூட்டமொன்றை இடுக