மழை

வருந்தி அழைத்தாலும் வராது

தானாக வரும் காதல் போல

    ——- 

எத்தனை முறை பெய்தாலும்

அடுத்தமுறை எப்போது

ஏக்கத்தில் மனது

——–

மழை எழுதிப்பார்த்ததில்

நனைந்து போனது இதயம்

——

குடை பிடித்து தடுத்தாலும்

தடை தவிர்த்து பாதம் தொடும்

——-

மழை இசை

மழை இரைச்சல்

மழை இம்சை

மழை இயக்கம்

——–

மழைக்காக காத்திருந்த மனசு

வந்தவுடன் கேட்க்கும் மழை நின்னாச்சா

——-

வராத போது மழை பிடிக்கும் மனசுக்கு

வந்தவுடன் குடை பிடித்துவிடும்

——-

கறுப்பு கொடி காட்டினாலும்

கம் என்று பெய்துவிடும்

——–

கவிஞனுக்கு மழை கூடல்

சிறுவனுக்கு அது கடல்

——-

நின்ற பின்னும்

பெய்துகொண்டே ……இருக்கும்

மனதில்

——

உழவு நிலத்தில் விளைச்சலானது

பரிணாம வளர்ச்சியில் அரசியலானது

பின்னூட்டமொன்றை இடுக

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑