போறாளே போறாளே ………

நான் எழுதி இசை கோர்ப்பு செய்த‌ பாட‌ல்க‌ள் இங்கு இட‌ம் பெறும் ……….

போறாளே போறாளே ………

போறாளே போறாளே ………

போறாளே போறாளே என்னை விட்டு போறாளே
க‌ண்ணில் காத‌ல் தீயை மூட்டி போறாளே
அவ‌ள் விண்ணோடு மின்ன‌லா பூவோடு தென்ற‌லா
நெஞ்சோடு காத‌லாய் ஆடும் ஊஞ்ச‌லா
நான் கொஞ்சாத கொஞ்ச‌லா கெஞ்சாத‌ கெஞ்சலா
கொல்லாம‌ல் கொல்லுதே சின்ன‌ வெண்ணிலா

போறாளே போறாளே என்னை விட்டு போறாளே
க‌ண்ணில் காத‌ல் தீயை மூட்டி போறாளே
                (1)

ர‌த்த‌ம் ச்சொட்ட‌ ச்சொட்ட‌ என் க‌ண்ணீரெல்லாம் கொட்ட‌
தேகம் எங்கும் சுட்ட க‌ருந்தீயாய் போறாளே
காத‌ல் த‌ந்துவிட்டு என் நெஞ்சை கொன்றுவிட்டு
வ‌ட்டிக்கார‌ன்போலே எனை வாரிச்சென்றாளே
அவ‌ள் விண்ணோடு மின்ன‌லா பூவோடு தென்ற‌லா
நெஞ்சோடு காத‌லாய் ஆடும் ஊஞ்ச‌லா
நான் கொஞ்சாத கொஞ்ச‌லா கெஞ்சாத‌ கெஞ்சலா
கொல்லாம‌ல் கொல்லுதே சின்ன‌ வெண்ணிலா

              (2)
ஓரவிழி பார்வ‌ என் விலாவெல்லாம் நோக‌
நெஞ்சுகூட்டில் என்னை கிள்ளிச்சென்றாளே
போகும் பாதை பார்த்து நான் காத்திருந்தேன் நேத்து
ஆயுள் எல்லாம் சேர்த்து அவ‌ள் அள்ளிச்சென்றாளே
நான் கொஞ்சாத கொஞ்ச‌லா கெஞ்சாத‌ கெஞ்சலா
கொல்லாம‌ல் கொல்லுதே சின்ன‌ வெண்ணிலா
அவ‌ள் விண்ணோடு மின்ன‌லா பூவோடு தென்ற‌லா
நெஞ்சோடு காத‌லாய் ஆடும் ஊஞ்ச‌லா

பின்னூட்டமொன்றை இடுக

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑