நேற்றைய இரவில்
உன் நினைவு வேதனைகள்
என் இதயத்தை அழுத்த
வெடித்து சிதறிய ஆறு கண்ணீர்த்துளிகள்
என் தலையணையை நனைத்தன
உன் மெண்மையான குரலையும்
அழகிய புன்னகையையும்
இழந்தமைக்காக விழுந்தது முதல் துளி
இரண்டாவது
என் நினைவில் கலந்துவிட்ட
வெட்க்கத்தில் சிவக்கும்
தேவதை முகத்திற்கு
சந்தேகமேயில்லை
மூன்றாவது துளி
என்னை வருடிவிடும்
மிருதுவான அழகிய
விரல்களுக்காக
இவற்றிற்கு பிறகு
வந்த நான்காவது துளி
உன் உள்ளங்கையில்
விழவேண்டிய கண்ணீர்த்துளிகள்
என் தலையணையில்
விழுகின்றனவே ….
மிகுந்த அர்த்தத்துடன்
விழுந்தது ஐந்தாவது துளி
என் பாசத்தை முழுமையாக
வெளிப்படுத்தாமல் விட்டு விட்டு
ஏங்கித்தவிக்கும் என் ஏக்கத்திற்காக
என் ப்ரியமானவளே
உன்னை இழந்து தவிக்கிறேன்
எப்போது உன் மடியில்
புதையும் என் முகம்?
நினைக்கும்போதே
வெடித்து தெரித்தது
அந்த கணமான
ஆறாவது கண்ணீர்த்துளி
பின்னூட்டமொன்றை இடுக