என்னால்
மறந்து போக முடியாத
ஒரு முகத்தை
மறக்கமுடியாத
நாளான ஆகஸ்ட் 15, 1999
அன்று சந்தித்தேன்
முதலில் தோழியானாள்
பின்பு காதலியானாள்
அதன் பிறகு மனைவியானாள்
இன்று தாயாய் அவளை
தினம் தினம் சந்திக்கிறேன்
தோழியும் காதலியும்
கானாமல் போனதில்
கொஞ்சம் வருத்தம்தான்
வேரொரு ஆகஸ்ட் 15தில்
அவர்கள் இருவரையும்
மீண்டும் சந்திப்பேன்
என்ற நம்பிக்கையில்
அவளுக்கு
சுதந்திரதின வாழ்துக்களை
கூற விரைகிறேன்
பின்னூட்டமொன்றை இடுக